sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேசிய வருவாய் வழி படிப்பு உதவி விண்ணப்பங்கள் வரவேற்பு

/

தேசிய வருவாய் வழி படிப்பு உதவி விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய வருவாய் வழி படிப்பு உதவி விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய வருவாய் வழி படிப்பு உதவி விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஜன 23, 2025 05:12 AM

Google News

ADDED : ஜன 23, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை தேர்வு திட்டம் தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

இதுகுறித்து, பள்ளி கல்வி, இணை இயக்குனர், சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட, அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள், பொருளாதரத்தில், பின் தங்கிய, இடைநிற்றலை தவிர்ப்பதற்காக மத்திய கல்வி அமைச்சகம் மூலம், புதுச்சேரி பள்ளி கல்வி இயக்கத்தால், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வு திட்டம், நடத்தப்பட உள்ளது.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வு திட்டம், எழுத்து தேர்வின் மூலமாகவும், தகுதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம், சாதி, மண்டல, அடிப்படையில், நடத்த உள்ளது. தேர்வு செய்யப்படும் 125 மாணவ, மாணவிகளுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு ஆண்டு தோறும், 12 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு, மத்திய கல்வித்துறை அமைச்சகம் மூலம் உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த தேர்வு, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதியில், மார்ச் 1ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பு மாணவர்கள், தங்கள் பள்ளிகள் மூலம், https://schooledn.py.gov.in இணையதள முகவரில், நாளை முதல், விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர, வரும் பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us