sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பல்கலை., தொலைதுார படிப்புகளுக்கு 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

/

பல்கலை., தொலைதுார படிப்புகளுக்கு 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பல்கலை., தொலைதுார படிப்புகளுக்கு 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பல்கலை., தொலைதுார படிப்புகளுக்கு 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


ADDED : அக் 09, 2025 02:02 AM

Google News

ADDED : அக் 09, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலை., தொலைதுார படிப்புகளுக்கு வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழக தொலைதுார கல்வி இயக்குநர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தொலைதுாரக் கல்வி இயக்குநரகத்தால் மொத்தம் 20 பட்டப்படிப்புகள் வழங்கபட்டு வருகிறது.

இதில் சந்தைப்படுத்தல், நிதி, மனித வள மேலாண்மை, சர்வதேச வணிகம், பொது, சுற்றுலா, செயல்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை, மருத்துவமனை மேலாண்மை உள்ளிட்ட எட்டு எம்.பி.ஏ., மேலாண்மை படிப்புகள் உள்ளன.

மேலும், முதுகலை பட்டப்படிப்புகளும் உள்ளன அவற்றில் MA - ஆங்கிலம், ஹிந்தி, சமூகவியல், எம்.காம்., உள்ளிட்ட நான்கு முதுநிலை படிப்புகள் உள்ளன.

ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல் மற்றும் பத்திரிகை வெகுஜன தொடர்பு ஆகியற்றில் யு.ஜி., பி.பி.ஏ., பி.காம்., பி.ஏ., படிப்புகள் உள்ளன.

இந்த பட்டப்படிப்புகளும் டில்லியில் உள்ள தொலைதுாரக் கல்விப் பணியகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. ஆர்வம் உள்ள மாணவர்கள் வரும் 15ம் தேதி மாலை 4:00 மணி வரை https://dde.pondiuni.edu.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு, 0413-2654439 என்ற எண்ணிலும் உதவி மையத்தையும், ddehelpdesk@pondiuni.ac.in என, இமெயிலிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us