sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அம்பு போடுதல் வைபவம் 

/

அம்பு போடுதல் வைபவம் 

அம்பு போடுதல் வைபவம் 

அம்பு போடுதல் வைபவம் 


ADDED : அக் 13, 2024 07:31 AM

Google News

ADDED : அக் 13, 2024 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி வரதராஜப்பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் நிறைவாக, பெருமாள் குதிரை வாகனத்தில் தசமி அம்பு போடுதல் வைபவம் நடந்தது.

புதுச்சேரி, காந்தி வீதியில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், நவராத்திரி உற்சவம் கடந்த 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, தினமும் இரவு 7:00 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் உள் புறப்பாடு நடக்கிறது.

நவராத்திரி நிறைவாக, நேற்று காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது.

மாலை 6:00 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் உள் புறப்பாடாகி, 'தசமி அம்பு போடுதல் வைபவம்' நடந்தது.

நேற்று புரட்டாசி 4வது சனிக்கிழமை என்பதால், அதிக அளவில் பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us