ADDED : மே 22, 2026 02:45 AM

வில்லியனுார்: அரியூர் ராமச்சந்திரா வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய 93 மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து ள்ளனர். பள்ளியில் மாணவி பார்கவி 494 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தையும், பள்ளியில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார். அவர், தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-99 மற் றும் சமூக அறிவியல்-98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பள்ளி மாணவிகள் ஆண்ரினா, நிவேதா மற்றும் மாணவர் ஹரிஷ் ஆகியோர் 488 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி கீர்தனா 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மாணவிகள் ரித்துபர்ணா-486, பவித்ஷா-484, ஜனனி-483, ரேஷ்மா-481 மற்றும் பிரியதர்ஷினி-488 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன் பாராட்டினார். அவர் கூறுகையில், 'எங்கள் பள்ளி கிராம பகுதியில் இருந்தாலும், நகர பகுதிக்கு இணையாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
சாதனைக்கு பாடுபட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி' என்றார். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அலுவலர் ராம்பிரசாத் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
