ADDED : செப் 20, 2024 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை எஸ்.வி., பட்டேல் சாலையில் மது போதையில் வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், திருப்பூரை சேர்ந்த அரவிந்த்,30; என தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
அதே போல் கடற்கரை சாலையில் இரண்டு வாலிபர்கள் போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்தனர். அவர்களை ஒதியஞ்சாலை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் விழுப்புரம் நவீன்குமார், 21; ராகுல், 23, என தெரியவந்தது. இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.