ADDED : ஜன 17, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது மக்களிடம் தகராறு செய்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது வில்லியனுார் சாலையில் உள்ள துணிக்கடை எதிரில் லாஸ்பேட் கல்லுாரி சாலையைச் சேர்ந்த விஜயகுமார், 30, என்பவர் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணி யில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
அதே போல், அரும்பார்த்தபுரம் சாலையில் பொதுமக்களிடம் தகராறு செய்த அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த அய்யப்பன் 39, என்பவரை போலீசார் கைது செய்தனர்.