ADDED : பிப் 15, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : வரதட்சணை கேட்டு கர்ப்பிணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து கணவர், அவரது தாய் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி குயவர்பாளையம் வேல்முருகன் நகரை சேர்ந்தவர் குருசெல்வம், 32; பெயிண்டர், கடந்த ஆண்டு இவருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஷாலினி,19; என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இவரது மனைவி கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், இவரது தாய் வீட்டில் இருந்து மேலும் நகைகள் வாங்கி வருமாறு, குருசெல்வம், அவரது தாய் ஆகிய இருவரும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கணவர், மாமியார் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

