சட்டசபை சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் பணி இடமாற்றம்
சட்டசபை சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் பணி இடமாற்றம்
ADDED : மே 20, 2026 04:37 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி தலைமையக எஸ்.பி., மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி சட்டசபையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோருக்கு பாதுகாப்பு பணியில் இருந்த இரு பாதுகாப்பு அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி சபாநாயகரின் சிறப்புப் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் முருகன், தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், துணை சபாநாயகரின் சிறப்புப் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த சப்--இன்ஸ்பெக்டர் பிரதாபன், உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
