/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர் மீது தாக்குதல் 4 பேருக்கு வலை
/
மீனவர் மீது தாக்குதல் 4 பேருக்கு வலை
ADDED : ஜன 21, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பத்தை சேர்ந்தவர் முருகன், 48; மீனவர்.
இவர் கடந்த 18ம் தேதி, கடலுக்கு சென்று மீன் பிடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், கீர்த்தன், அஜய், ராபின் ஆகியோர் முருகனை வழிமறித்து, இரும்பு பைப்பால், தாக்கினர். அதில், காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, சந்தோஷ் உட்பட 4 பேரை தேடிவருகின்றனர்.