ADDED : பிப் 20, 2026 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தேங்காய்திட்டு துறைமுகத்தில் மீன் வியாபாரியை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, நல்லவாடு, தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மதியழகன், 47; தேங்காய்திட்டு துறைமுகத்தில் மீன் வாங்கி, வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த 18ம் தேதி மதியழகன், துறைமுகத்திற்கு மீன் வாங்க சென்றபோது, அங்கிருந்த நல்லவாடை சேர்ந்த அன்பரசன், 38; என்பவர் முன்விரோதம் காரணமாக மதியழகனை திட்டி, இரும்பு கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். மதியழகன் அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

