/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொலை முயற்சி வழக்கு: ரவுடிக்கு 7 ஆண்டு சிறை
/
கொலை முயற்சி வழக்கு: ரவுடிக்கு 7 ஆண்டு சிறை
ADDED : பிப் 24, 2026 04:21 AM
நெட்டப்பாக்கம்: முன்விரோதத்தில் மூவரை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது.
புதுச்சேரி, கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் வெள்ளந்தி. இவர் தனது அண்ணன் மகன் மகி, உறவினர் ரவிச்சந்திரன் ஆகியோருடன் கடந்த 2008 ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி புதுச்சேரியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நெட்டப்பாக்கம் அருகே வந்தபோது, அதே ஊரை சேர்ந்த ரவுடி விநாயகமூர்த்தி,40; மற்றும் சிலர், முன்விரோதம் காரணமாக வெள்ளந்தி உள்ளிட்ட மூவரையும் வழிமறித்து கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து வெள்ளந்தி கொடுத்த புகாரின் பேரில் ரவுடி விநாயகமூர்த்தி, பாக்யராஜ், ஸ்ரீதர், கிருஷ்ணன், குப்பன் ஆகியோரை கைது செய்த நெட்டப்பாக்கம் போலீசார், அவர்கள் மீது புதுச்சேரி சி.ஜே.எம்., கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
விசாரித்த நீதிபதி யஸ்வந்த்ராவ் இங்கர்சல், விநாயகமூர்த்திக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

