/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டோ டிரைவர் சாவு போலீசார் விசாரணை
/
ஆட்டோ டிரைவர் சாவு போலீசார் விசாரணை
ADDED : அக் 14, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : அதிகமாக குடித்த ஆட்டோரி டிரைவர்பரிதாபமாக இறந்தார்.
திண்டிவனம், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் அப்பன்ராஜ் 44, ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கம் உள்ள இவர் தினமும் புதுச்சேரி சேதாரப்பட்டுக்கு குடிப்பதற்கு வருவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் காலை சேதாரப்பட்டுக்கு மது குடிக்க வந்த அப்பன்ராஜ் அங்கு அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு சாராயக்கடை எதிரில் பரிதாபமாக இறந்து கிடந்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.