ADDED : நவ 03, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு, சாலை புதுநகரை சேர்ந்தவர் விஜயகுமார், 32; ஆட்டோ டிரைவர். கடந்த 2ம் தேதி வீட்டில், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு குடும்ப பிரச்னையால், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை வீட்டில் இருந்தவர்கள் காப்பாற்றினர்.
இந்நிலையில், அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.