ADDED : அக் 28, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பள்ளி துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் வாணி முன்னிலை வகித்தார். பொறுப்பாசிரியர் லோகேஸ்வரி வரவேற்றார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு புதியம் சட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். முகாமில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மணிகண்டன், சட்ட பணிகள் ஆணைய அலுவலர்கள் செய்திருந்தனர்.