ADDED : நவ 26, 2025 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: அரசு மேல்நிலைப்பள்ளியில், சர்வதேச பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில், வழக்கறிஞர் ஜெயா, ஜெயந்தி ஆகியோர், மாணவிகள் வன்கொடுமைக்கு எதிராக சட்ட ரீதியாக எவ்வாறு எதிர் கொள்வது பற்றி பேசினார்கள்.
பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

