ADDED : அக் 26, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்,: முருங்கப்பாக்கம் நலவாழ்வு மையத்தில், ஆயுர்வேதம் மருத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்திய மருத்துவ துறை சார்பில், ஆயுர்வேத தினத்தையொட்டி, முருங்கப்பாக்கம் நலவாழ்வு மையத்தில், ஆயுர்வேதம் மருத்துவம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மேனகா, ஆயுர்வேத மருத்துவர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பாஸ்கர் எம்.எல்.ஏ., பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
ஆயுர்வேதம் மருத்துத்தின் பயன்கள், மருந்துகள் எடுத்தும் கொள்ளும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.