ADDED : ஜன 23, 2025 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார்பேட் அரசு தொடக்கபள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமை ஆசிரியர் ரேணுகா தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வில்லியனுார் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வீடு வீடாக சென்று வரும் கல்வியாண்டில் சேர்க்கை குறித்தும், அரசு பள்ளியின் செயல்பாடுகள், மாணவர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ஆசிரியர்கள் மணிமாறன், வெங்கடேசன், கிரிஜா, லட்சுமி காந்தா, சுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.