sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சமுதாய கல்லுாரியில் விழிப்புணர்வு பயிற்சி

/

சமுதாய கல்லுாரியில் விழிப்புணர்வு பயிற்சி

சமுதாய கல்லுாரியில் விழிப்புணர்வு பயிற்சி

சமுதாய கல்லுாரியில் விழிப்புணர்வு பயிற்சி


ADDED : மார் 22, 2025 09:27 PM

Google News

ADDED : மார் 22, 2025 09:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரியில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்நுட்ப மையம் சார்பில் மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடந்தது.

கல்லுாரி பொறுப்பு முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் முருகேசன் வரவேற்றார். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்நுட்ப மையத்தின் துணை பொது மேலாளர் அமித் நைன், பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து, உற்பத்தித் துறையில் வேலை தேடுபவர்களை விட, வேலை கொடுப்பவர்களாக மாறுவதற்கு ஆர்வமாக இருக்க வேண்டும் என மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

புதுச்சேரி பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை உதவிப் பேராசிரியர் சந்தன ஈஸ்வர் சிறப்புரையாற்றினார். தருண் ஸ்போர்ட்ஸ் வேர், புதுச்சேரி நிறுவன இயக்குனர் பாலமுருகன், ஒன் பஞ்ச் மேன் நிறுவன இயக்குனர் யுவராஜ் மற்றும் டிராபி மாலின் நிறுவனர் வேல்முருகன் ஆகியோர் விளையாட்டு வீரர்களை மேம்படுத்துதல், விளையாட்டு தொழில் முனைவோரின் தடைகளை உடைத்தல் மற்றும் விளையாட்டுத் துறையில் வெற்றி பெறும் உத்திகள் குறித்து பேசினர்.

உடற்கல்வி மற்றும் யோகா துறை உதவி பேராசிரியர் ஜெகதீஸ்வரி ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us