sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவாக்கம்; 50 ஆயிரம் முதியவர்கள் பயனடைவர்; கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்

/

ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவாக்கம்; 50 ஆயிரம் முதியவர்கள் பயனடைவர்; கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்

ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவாக்கம்; 50 ஆயிரம் முதியவர்கள் பயனடைவர்; கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்

ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவாக்கம்; 50 ஆயிரம் முதியவர்கள் பயனடைவர்; கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்


ADDED : பிப் 15, 2025 07:17 AM

Google News

ADDED : பிப் 15, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஆயுஷ்மான் பாரத் வே வந்தனா திட்டத்தில் புதுச்சேரியில் 50 ஆயிரம் முதியவர்கள் பயனடைவர் என, கவர்னர் தெரிவித்தார்.

ஆயுஷ்மான் பாரத் வே வந்தனா திட்டம் துவக்க விழாவில், கவர்னர் கைலாஷ் நாதன் பேசியதாவது:

70 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை விரிவு படுத்துவதன் மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி உள்ளோம். இத்திட்டத்தின் கீழ் பொருளாதார உச்ச வரம்பு எதுவும் இல்லாமல் 70 வயதை கடந்த மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு பெறலாம்.

இதன் மூலம் நாடு முழுதும் 6 கோடி பேர் பயன்பெறுவர். புதுச்சேரியில் மட்டும் 50 ஆயிரம் பேர் பயனடைவர். ஏற்கனவே, தேசிய அளவிலான மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக பிரதமரால் 2018ல் துவங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம் தற்போது 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களும் பயன் அடையும் விதமாக விரிவு படுத்தப்பட்டு இருக்கிறது.

மருத்துவ சேவை இலவசமாக கிடைப்பதால் இனி அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும். இதய நோய், கேன்சர், மூட்டு வலி, டயாலிசிஸ், ரத்த அழுத்தம் போன்ற நீண்ட நாள் நோய்களுக்கு தேவையான சிகிச்சை இலவசமாக கிடைக்கும்.

இந்த தரமான மருத்துவ வசதிகளை அரசு மருத்துவமனையில் மட்டும் அல்ல, பல தனியார் மருத்துவமனையிலும் பெற முடியும். மூத்த குடிமக்களுக்கு திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். திட்டத்தின் பயன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.






      Dinamalar
      Follow us