/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்கள் விடுதி பின் குழந்தை உடல்
/
பெண்கள் விடுதி பின் குழந்தை உடல்
ADDED : டிச 30, 2024 05:48 AM
ராமநத்தம் : தனியார் கல்லூரி பெண்கள் விடுதி பின்னால், பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், ராமநத்தம் அருகே தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லுாரி பெண்கள் விடுதி பின்னால், பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தை உடல் கிடந்தது.
தகவலறிந்த ராமநத்தம் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று, குழந்தையின் உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, குழந்தை யாருடையது. அது எப்படி இறந்தது, விடுதி பின்னால் வீசியது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
கல்லுாரி விடுதி அருகே, குழந்தை உடல் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.