/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையை ஆக்கிரமித்து பேனர்; போலீசார் வழக்குப் பதிவு
/
சாலையை ஆக்கிரமித்து பேனர்; போலீசார் வழக்குப் பதிவு
சாலையை ஆக்கிரமித்து பேனர்; போலீசார் வழக்குப் பதிவு
சாலையை ஆக்கிரமித்து பேனர்; போலீசார் வழக்குப் பதிவு
ADDED : ஜூலை 13, 2025 12:28 AM
பாகூர் : போக்குவரத்துக் இடையூறாக பேனர் வைக்கப்பட்டது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி - கடலுார் சாலை, கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், கன்னியக்கோவில் சந்திப்பு பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது குறித்து,பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவி பொறியாளர் ஜெயராஜ் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.