sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆபத்தை உணராமல் கடலில் குளியல்

/

ஆபத்தை உணராமல் கடலில் குளியல்

ஆபத்தை உணராமல் கடலில் குளியல்

ஆபத்தை உணராமல் கடலில் குளியல்


ADDED : அக் 14, 2024 08:14 AM

Google News

ADDED : அக் 14, 2024 08:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளித்தனர்.

புதுச்சேரி கடற்கரை பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும், கடலின் கோர முகம் பலருக்கு தெரியாது. கடல் அலையின் சீற்றம், கரையோரம் உள்ள ஆழமான பகுதி காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் கடலில் குளித்த 60க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

இதனால் புதுச்சேரி கடலில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். பெரியக்கடை மற்றும் ஒதியஞ்சாலை போலீசார் கடலில் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகளை அடிக்கடி எச்சரித்து வெளியே அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால், கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆபத்தை உணராமல் சில சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளித்தனர். கடல் அலையில் சிக்கும் சுற்றுலா பயணிகளை காப்பாற்ற நியமிக்கப்பட்ட மீட்பு குழுவினரும் நேற்று கடற்கரையில் மிஸ் ஆகி இருந்தனர்.






      Dinamalar
      Follow us