ADDED : செப் 14, 2026 10:15 PM
புதுச்சேரி: பைக் மோதி இறந்தவர் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் ஆத்துவாய்கால்பேட் சந்திப்பு பகுதியில் 50 வயது மதிக்க தக்க ஆண் நபர், கடந்த 8 ம் தேதி இரவு 7.45 மணியளில், சுல்தான்பேட்டை–புதுச்சேரி சாலையினை கடக்கும் போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த பைக் அவர் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 9ம் தேதி காலை இறந்தார்.
விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால் வில்லியனுார் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் 99947 48677, 26612246 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
