தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக்குகள் மோதல் : வாலிபர் பலி

பைக்குகள் மோதல் : வாலிபர் பலி

பைக்குகள் மோதல் : வாலிபர் பலி


ADDED : ஜூலை 04, 2025 02:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2025 02:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் இருபைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் இறந்தார்.

காரைக்கால், திருநள்ளாறு, சேத்துார், பண்டாரவடை மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 54. இவர் அரசு நுாற்பாலையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது பைக்கில் வேலைக்கு சென்றபோது எதிரே வந்த பைக் ஒன்று நேருக்கு நேர் மோதியது.

இதில், ஆனந்தராஜ் மற்றும் மற்றொரு பைக்கில் வந்த நாகப்பட்டினம், ஏனங்குடி, ஆதலையூர், வடக்கு தெருவை சேர்ந்த அப்துல் மஜீத் மகன் சமீர், 29, ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இருவரும் அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சமீர் இறந்தார். விபத்து குறித்து திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us