நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக் திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
முருங்கப்பாக்கம் கணபதி நகரை சேர்ந்தவர் சுரேந்தர். 27; தனியார் கேண்டீனில் வேலை செய்து வருகிறார். வேலையை விட்டு தனது பைக்கை வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார்.
காலையில் எழுந்து பார்க்கும் போது, பைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
பல்வேறு இடங்களில் தேடியும், பைக் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.