ADDED : நவ 04, 2025 09:51 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி:
புதுச்சேரி பா.ஜ., சார்பில் ராஜ்பவன், முத்தியால்பேட்டை தொகுதிகளுக்கான மீனவரணி செயல் வீரர்கள் கூட்டம் வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது.
தமிழ்நாடு, புதுச்சேரி பரதவர் முன்னேற்ற பேரவை மாநில பொருளாளர் அசோக் தலைமை தாங்கினார். பேரவை தலைவர் தயாளன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பளராக தமிழக பா.ஜ., மாநில பொது செயலாளர் சீனிவாசன், புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் பங்கேற்று பேசினர். வெங்கடேச பெருமாள் நன்றி கூறினார்.
