sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 போலி மருந்து விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை கோரி பா.ஜ., மனு

/

 போலி மருந்து விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை கோரி பா.ஜ., மனு

 போலி மருந்து விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை கோரி பா.ஜ., மனு

 போலி மருந்து விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை கோரி பா.ஜ., மனு


ADDED : டிச 09, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டி பா.ஜ.,வினர் நேற்று கவர்னரிடம் மனு அளித்தனர்.

பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், பொதுச் செயலாளர் மோகன்குமார், துணை தலைவர்கள் ரத்தினவேல், ஜெயலட்சுமி, பழனி, நிர்வாகிகள் அருள்முருகன், நாகேஸ்வர் ஆகியோர் நேற்று மதியம் 12:30 மணிக்கு மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினர்.

அப்போது, புதுச்சேரியில் பூதாகரமாக வெடித்துள்ள போலி மருந்து விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டி மனு அளித்தனர்.

பின்னர் மாநில தலைவர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ள போலி மருந்து விவகாரத்தில் கவர்னர் தலையிட்டுள்ளதால், போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கண்டு பிடித்து 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாபியா கும்பலையும், அவர்களுக்கு உதவியவர்களையும், அவர்களால் ஆதாயம் அடைந்தவர்களை கண்டுபிடித்து, கடும் தண்டனை வழங்க வேண்டும். அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அதற்கு, இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ஜ., சார்பில், கவர்னரிடம் மனு அளித்துள்ளோம்.

போலி மருந்து தயாரிக்கும் கும்பலுக்கு யார் உடந்தையாக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும், எந்த அதிகார மையத்தில் இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.,க்கு பரிந்துரைக்க வலியுறுத்தி உள்ளோம்.

கவர்னரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us