/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளாக்செயின் தொழில்நுட்பம் இணையவழி கலந்துரையாடல்
/
பிளாக்செயின் தொழில்நுட்பம் இணையவழி கலந்துரையாடல்
ADDED : ஜன 28, 2024 04:44 AM
புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் இயங்கிவரும் அடல் இன்குபேஷன் சென்டர் சார்பில் பிளாக்செயின் எனப்படும் கட்டசங்கிலி தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்கள் குறித்து இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
அடல் இன்குபேஷன் சென்டரின் இயக்குனர் சுந்தரமூர்த்தி துவக்கி வைத்தார்.
பிளாக்செயின் குறித்த சந்தேகங்களுக்கு தொழில்நுட்ப வல்லுநர் சதிஷ் விளக்கம் அளித்தார். இதில் பல்வேறு தொழில்நுட்ப கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் , மாணவர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அடல் இன்குபேஷன் சென்டரின் தலைமை செயல் அதிகாரி விஷ்ணு வரதன், தலைமை நிர்வாக அதிகாரி ராஜகுமார், மேலாளர் காமேஸ்வரன், ஆராய்ச்சி பொறியாளர் ஹரி தர்ஷன், செயல் திட்ட வடிவமைப்பாளர் உதயகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.