/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேட்ரிக் பள்ளியில் ரத்ததான முகாம்
/
பேட்ரிக் பள்ளியில் ரத்ததான முகாம்
ADDED : மார் 09, 2026 04:08 AM

புதுச்சேரி: பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர் ரெஜிஸ் நினைவு நாளையொட்டி, ரத்ததான முகாம் நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த முகாமில் இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், கொடையாளர்களைப் பரிசோதித்து ரத்தம் சேகரித்தனர். இதில் ,100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ரத்ததானம் செய்தனர்.
முகாமில், பள்ளியின் மருத்துவ இயக்குநர் ஜீட்டா பிரடெரிக், பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சீத்தாராமன், அல்போன்ஸ் ஹில்டா, சிவக்குமார், மீனாட்சி, ஆரோன் ஆல்பிரட் இமானுவேல், சரவணகுமார், அபிஷேக் உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

