ADDED : மார் 21, 2026 05:20 AM

புதுச்சேரி: தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நுாலக மற்றும் தகவல் அறிவியல் முன்னேற்றச் சங்கம் ரத்த தான முகாம் நடந்தது.
முகாமைக் கல்லுாரி முதல்வர் கருப்புசாமி துவக்கி வைத்தார். முகாமில் கல்லுாரியின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், செந்நாடாச் சங்க உறுப்பினர்கள், நுாலக மற்றும் தகவல் அறிவியல் முன்னேற்றச் சங்கத்தின் உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
அதனை ஜிப்மர் மருத்துவக் குழுவினர் சேகரித்து, பாதுகாப்புடன் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். ஏற்பாடுகளைக் நுாலகர் தீபக், சங்கத்தின் நிர்வாகிகள் லீலாதரன், சரவணன், அன்னபூரணி ஆகியோர் செய்திருந்தனர்.
இதில், தேசிய மாணவர் படை அதிகாரி தீபக் உச்சம்பள்ளி, செந்நாடாச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹெப்சிபா, உடற்கல்வி இயக்குநர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
