/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம்
/
பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம்
ADDED : செப் 30, 2024 05:48 AM

புதுச்சேரி: புதுச்சேரி பா.மா.க.,வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், கவுண்டம்பாளையம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். மாநிலத் துணை அமைப்பாளர் வடிவேல் மதியழகன், சங்கர், வன்னியர் சங்க தலைவர் துரை, மாநில ஆலோசகர் ஜெயபாலன், செயலாளர் நாகப்பன், பொருளாளர் நரசிம்மன், சமூக முன்னேற்ற சங்க பொறுப்பாளர் சம்பந்தம், சிவப்பிரகாசம் உட்ப சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் என். ஆர்., காங்., பா.ம.க., கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சி அமைத்தது. தேர்தல் ஒப்பந்தப்படி முதல்வர் மற்றும் பா.ஜ.,பொறுப்பாளர் நிர்மல் குமார் சூரானா கொடுத்த உறுதிமொழிப்படி மூன்று வாரிய தலைவர் பதவிகளை வழங்க வேண்டும்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், புதுச்சேரி, காரைக்கால் உட்பட 15 தொகுதிகளை தேர்ந்தெடுத்து தீவிர களப்பணி செய்து வருகிறோர். இதில் 10 தொகுதிகளை போட்டியிடுவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

