/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி பு.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
/
உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி பு.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி பு.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி பு.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 16, 2024 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை : உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வலியுறுத்தி புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், திருபுவனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருபுவனை மேம்பாலம் நான்குமுனை சந்திப்பில் நடந்த போராட்டத்திற்கு நிர்வாகிகள் மோகன்குமார், பரந்தாமன், தனஞ்செயன் வரவேற்றனர்.
சேர்மன் வெங்கட்ராமன், பேராசிரியர் ராஜன் நோக்க உரையாற்றினர்.
கட்சியின் தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கி, கோரிக்கையை வலியுறுத்தி பேசுகையில், 'புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததாலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கி பேசினார்.
ஆண்டாள் நன்றி கூறினார்.