/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அழுகிய நிலையில் சடலம்; போலீசார் விசாரணை
/
அழுகிய நிலையில் சடலம்; போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 31, 2025 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லித்தோப்பு, வினோபா வீதியைச் சேர்ந்தவர் பெர்னார்ட், 57; டூவீலர் மெக்கானிக். இவரது மனைவி பிரிந்து சென்ற நிலையில், பெர்னார்ட் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்.
இந்நிலையில் அவரது வீட்டு அறையில் இருந்து கடந்த 27ம் தேதி துார்நாற்றம் வீசியது. தவலறிந்த உருளையான்பேட்டை போலீசார் விரைந்து சென்று அறையை திறந்து பார்த்தனர். அவர் அங்கு அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். போலீசார் சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.