ADDED : ஏப் 12, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சாரம், அன்னைதெரசா நகரை சேர்ந்தவர் கஜேந்திரன், 57; கொத்தனார். இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். தொடர்ந்து, குடிப்பதற்கு வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு தராததால் மனவருத்தத்தில்இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவரது மனைவி சுமதி வேலைக்கு சென்று மதியம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் சமையல் அறையில் கஜேந்திரன் துாக்கில் தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சுமதி, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு,புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.டாக்டர் பரிசோதித்து அவர் இறந்ததை உறுதி செய்தனர். இது குறித்த புகாரின்பேரில் டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


