ADDED : ஜன 20, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அதிகமாக குடித்த கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
கூடப்பாக்கம், தாமரைக்குளம் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக்கேயன், 44; கொத்தனார். குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் காலை கூட்பாக்கம் மந்தைவெளி திடலில் கார்த்திக்கேயன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அவரது மகன் சூர்யா அளித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.