/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பத்தில் பாலம் கட்டும் பணி
/
அரியாங்குப்பத்தில் பாலம் கட்டும் பணி
ADDED : டிச 09, 2025 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: கழிவுநீர் வாய்க்கால் குறுக்கே 20.70 லட்சம் ரூபாய் மதிப்பில் பாலம் கட்டும் பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் தொகுதி ஆனந்தம் நகரில், கழிவுநீர் வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டுவதற்கு, 20.70 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனப் பிரிவு செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் பிரித்திவிராஜ், உட்பட நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

