ADDED : மே 24, 2026 06:06 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் 4 நாட்கள் நடக்கிறது.
இந்த சிறப்பு முகாம் நாளை 25ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.
முகாம் ரங்கப்பிள்ளை வீதி, பொது தொலைபேசி நிலைய அலுவலகம், மேட்டுப்பாளையம் ஆனந்தா இன் அருகில், நாவற்குளம் அன்னை நகர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், திருவண்டார்கோவில், வில்லியனுார் சங்கர வித்யாலயா பள்ளி எதிரில், கரியமாணிக்கம், அரியாங்குப்பம், ராஜிவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனை அருகில், ஆரியப்பாளையம், மடுகரை, திருக்கனுார், கோட்டக்குப்பம் இந்தியன் பேங்க் அருகில், லாஸ்பேட்டை ராஜிவ் பார்க் எதிரில் கரிக்கலாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் முகாம் நடக்கிறது.
அதில், 4ஜி சேவையை ஊக்குவிக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் 2ஜி மற்றும் 3ஜி சிம் கார்டை புதிய 4ஜி சிம்மாக இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். மேலும், பி.எஸ்.என்.எல்., புதிய எப்.டி.டி.எச்., திட்டமான பேசிக் நியோவுடன் அதிவேக இணையத்தை, 449 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்தகவலை புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.
