/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.750 மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு டெண்டர் பணியில் கான்பெட் 'விறுவிறு'
/
ரூ.750 மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு டெண்டர் பணியில் கான்பெட் 'விறுவிறு'
ரூ.750 மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு டெண்டர் பணியில் கான்பெட் 'விறுவிறு'
ரூ.750 மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு டெண்டர் பணியில் கான்பெட் 'விறுவிறு'
ADDED : டிச 11, 2025 05:04 AM
புதுச்சேரி: பொங்கல் பண்டிக்கைக்கு 750 ரூபாய் மதிப்பில், 5 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க அரசு முடிவு செய்து, டெண்டர் பணிகளை ஆரம்பித்துள்ளது.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு தலா 3 ஆயிரம் ரொக்கப் பணம் அறிவித்துள்ளது.
மேலும், 2.25 கோடி குடும்பங்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தை போன்று, புதுச்சேரி அரசும் இந் தாண்டு அரசு ஊழியர், கவுரவ ரேஷன் கார்டு நீங்கலாக மற்ற அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பச்சரிசி - 4 கிலோ, நாட்டு சர்க்கரை-1 கிலோ, பாசிபருப்பு-1 கிலோ, நெய்-300 கிராம், சன்பிளவர் சமையல் எண்ணெய்-1 லிட்டர் உள்ளடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க முடிவு செய்து, கான்பெட் நிறுவனம் வாயிலாகடெண்டர் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
வரும் 29ம் தேதி இந்த டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது.
ஜன., 3ம் தேதி முதல் ரேஷன்கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த காங்., ஆட்சியில் கவர்னர் கிரண்பேடிக்கும், அப்போதைய அரசுக்கும் மோதல் ஏற்பட்டு புதுச்சேரியில் ரேஷன்கடைகள் மூடப்பட்டன.
அதையடுத்து பயனாளிகள் வங்கி கணக்கில் ரேஷன் பொருட்களுக்கு பணம் செலுத்தப்பட்டு வந்தது.கடந்த 2021ல் என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு பொறுப்பேற்றவுடன் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சை அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலைப்பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கியபொங்கல் பரிசு தொகுப்புவழங்கப்பட்டது.
2023ம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.
அதேபோல 2024ம் ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரூ.500ம், பின், கூடுதலாக ரூ.250 வழங்கியது. கடந்தாண்டும் பொங்கல் தொகுப்பிற்காக ரேஷன் கார்டிற்கு ரூ.750 பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மூன்றாண்டிற்கு பிறகு தற்போது ரொக்க பணத்திற்கு பதிலாக மீண்டும் பொங்கல் தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது .
எவ்வளவு செலவு புதுச்சேரி பிராந்தியத்தில் 2,63,386 ரேஷன்கார்டுகளும், காரைக்கால்-60,225, மாகே-7,981, ஏனாம்--15,498 என மொத்தம் 3,47,090 ரேஷன்கார்டுகள் உள்ளன.
ஒவ்வொரு பொங்கல் பரிசு தொகுப்பும் 750 ரூபாய் மதிப்பு கொண்டவை. எனவே, பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தால் அரசுக்கு கூடுதலாக ரூ.26 கோடி செலவாகும்.
தமிழகத்தை பார்த்து
புதுச்சேரி மக்கள் ஏக்கம்
சட்டசபை தேர்தலை குறித்து தமிழக அரசு வாக்காளர்களை குஷிப்படுத்தும் வகையில், 3 ஆயிரம் ரூபாய் பணமாக தர முடிவு செய்துள்ளது. ஆனால், புதுச்சேரியில் வெறும் 750 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளது, புதுச்சேரி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஒரு காலத்தில் புதுச்சேரி அரசின் நலத்திட்டங்களை தமிழக மக்கள் ஏக்கத்துடன் பார்ப்பர். ஆனால், இன்றைக்கு தமிழக அரசின் பொங்கல் திட்டத்தை ஒப்பிட்டு பார்த்து, சட்டசபை தேர்தல் வருது; இது போன்று, நம்ம அக்கவுண்டல விழுமா என்று புதுச்சேரி மக்கள் பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.

