/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோர்ட் உத்தரவுபடி டாக்டர் மீது வழக்கு
/
கோர்ட் உத்தரவுபடி டாக்டர் மீது வழக்கு
ADDED : நவ 28, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: கடலுார் மாவட்டம், திட்டக்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் கொளஞ்சி, 55. இவர் கடந்த ஜூலை 30ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த தலைமை மருத்துவர் (பொறுப்பு) சேபானந்தத்திற்கும், கொளஞ்சிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, கொளஞ்சியை டாக்டர் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கொளஞ்சி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், டாக்டர் சேபானந்தம் மீது, திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.