/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன் விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு
/
முன் விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு
ADDED : அக் 29, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மருந்து கம்பெனி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சேதராப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ், 34; தனியார் மருந்து கம்பெனி ஊழியர். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அய்யாதுரை குடும்பத்தினருக்கும் இட பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் அய்யாதுரை, அவரது மகன் யுவராஜ்,30; ஆகியோர் பிரச்சனை உள்ள இடத்தில் மதில் சுவர் அமைத்தனர்.
இதனை தட்டிக்கேட்ட ஜெய்கணேைஷ சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து ஜெய்கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார், அய்யாதுரை, யுவராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

