ADDED : செப் 17, 2025 07:20 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : பிள்ளைத்தோட்டத்தை சேர்ந்தவர் ஜானகிராமன், 22; டிங்கரிங் வேலை செய்து வருகிறார்.
இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ். இவர்களுக்கிடையே இடப்பிச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, சந்தோஷ் இவரது உறவினராக வரலட்சுமி மேலும் இரண்டு பேர் சேர்ந்து, ஜானகிராமன் மற்றும் அவரது தாயை தாக்கினர். புகாரின் பேரில், சந்தோஷ் உட்பட 4 பேர் மீது, உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர்.
