ADDED : பிப் 03, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: எஸ்.வி.பட்டேல் சாலையில் அனுமதியின்றி பேனர் வைத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலைகளில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் எஸ்.வி.பட்டேல் சாலை, அம்பேத்கர் வீதி சந்திப்பில் போக்குவரத்திற்கு இடையூறாக டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இது குறித்து, பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர் சீனிவாசன் புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்த மர்ம நபர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.