/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் ரகளை ஆறு பேர் மீது வழக்கு
/
பொது இடத்தில் ரகளை ஆறு பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 08, 2025 01:08 AM
பாகூர் : பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம், நவாதோப்பு பகுதியில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் முதுநகர் பகுதியை சேர்ந்த சூரியராஜ் 23; அன்னா நகரை சேர்ந்த கணேஷ் 51; குறிஞ்சிபாடியை சேர்ந்த விஜய் 24; ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட கடலூர் தேவணாம்பட்டினம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் 45; குடியிருப்புபாளையத்தை சேர்ந்த சதீஷ் 41; நிர்ணயப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஹரிஷ்குமார் 44; ஆகியோரை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.