தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

மாணவியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

மாணவியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு


ADDED : மே 09, 2025 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 03:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சுல்தான்பேட்டையை சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவர் முத்தியால்பேட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லுாரியில் படித்து வருகிறார். அவர் பகுதி நேரமாக மிஷன் வீதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

அவர், அதே பகுதியை சேர்ந்த முகமதுயூசப், 21, என்ற கல்லுாரி மாணவரை காதலித்து வந்தார். அந்த மாணவரின் செலவுக்காக மாணவி அவ்வப்போது பணம் கொடுத்து வந்தார். மாணவர் அடிக்கடி பணம்கேட்பதாலும், அவரின் நடத்தை சரியில்லை என்பதாலும் மாணவி அந்த மாணவரிட மிருந்து விலக ஆரம்பித்தார். இந்நிலையில் நேற்று கல்லுாரி முடித்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த மாணவியை மூலக்குளம் அருகே வழிமறித்த முகமதுயூசப் மாணவியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பணம் தர மறுத்ததால், மாணவியின் கன்னத்தில் அறைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us