/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் போலி ஆவணம் சமர்ப்பித்த வழக்கு; மேலும் 5 பேர் சேர்ப்பு
/
என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் போலி ஆவணம் சமர்ப்பித்த வழக்கு; மேலும் 5 பேர் சேர்ப்பு
என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் போலி ஆவணம் சமர்ப்பித்த வழக்கு; மேலும் 5 பேர் சேர்ப்பு
என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் போலி ஆவணம் சமர்ப்பித்த வழக்கு; மேலும் 5 பேர் சேர்ப்பு
ADDED : நவ 13, 2024 04:25 AM
புதுச்சேரி : எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் சீட் பெற போலி ஆவணம் சமர்ப்பித்த வழக்கில் மேலும் 5 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரி, 3 சுயநிதி மருத்துவ கல்லுாரி எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,) மற்றும் ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் சீட் பெற்றவர்களில் 44 மாணவர்கள் போலியான ஆவணம் சமர்ப்பித்தது தெரியவந்தது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் ரத்து செய்யப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்டாக் நிர்வாகம் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தது.
போலீசார் 44 மாணவர்கள் மீதும் போலி ஆவணம் தயாரித்தல், அதனை உண்மை என சமர்ப்பித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.வடக்கு எஸ்.பி., வீரவல்லபன் நேற்று சென்டாக் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது, வழக்கு தொடர்பாக கூடுதல் விபரங்கள், ஒவ்வொரு கட்ட கலந்தாய்வில் சீட் ஒதுக்கீடு பெற்றவர்கள் விபரங்களை எழுத்துபூர்வமாக அளிக்க அறிவுறுத்தினார்.போலி சான்றிதழ் அளித்த என்.ஆர்.ஐ., ஸ்பான்சர் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி வருகின்றனர்.
44 மாணவர்களும் தமிழகம், அந்தமான் நிக்கோபார், டில்லி, மும்பை, சத்திஷ்கர் பகுதிகைளை சேர்ந்தவர்கள். இந்நிலையில், சென்டாக் அதிகாரிகள் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பிய என்.ஆர்.ஐ., சான்றிதழ்களில், ஆஸ்திரேலியா மற்றும் அரபு நாடுகளுக்கு அனுப்பட்ட சான்றிதழ்களில் 5 மாணவர்களின் சான்றிதழ்கள் போலியானது என வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து சென்டாக்கிற்கு தகவல் வந்துள்ளது. அந்த மாணவர்களும் வழக்கில் சேர்க்கப்பட உள்ளனர்.