ADDED : ஏப் 15, 2026 10:31 PM
அ நிறம் | அளவு
பாகூர்: முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார் மாவட்டம், நத்தப்பட்டு காந்தி சிலை தெருவை சேர்ந்தவர் சந்தோஷ், 23; தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 10ம் தேதி தனது நண்பர்கள் விஷ்ணு, ராஜ்குமார் ஆகியோருடன், சோரியாங்குப்பத்தில் உள்ள தனியார் பாரில் மது வாங்கி கொண்டு குடிப்பதற்காக அங்கிருந்த கருமாதி கொட்டைக்கு சென்றனர்.
அப்போது, அங்கிருந்த சோரியாங்குப்பத்தைச் சேர்ந்த தியாகராஜன், சதாசிவம், விஜய், கார்த்திக் ஆகியோர் முன் விரோதம் காரணமாக, சந்தோைஷ வழி மறித்து தகராறு செய்து, தாக்கினர். படுகாயம் அடைந்த சந்தோஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரின் பேரில், பாகூர் சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் சுபரமணியன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
