ADDED : மே 20, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் பொது இடத்தில் மது அருந்திய நபர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காரைக்கால் திருப்பட்டினம் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது பொது இடத்தில் மது அருந்திவிட்டு தள்ளாடிய நிலையில் பொதுமக்களை ஆபாசமாக பேசிய நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் நாகை மாவட்டம் ஏனங்குடி பகுதியை சேர்ந்த முகமது தெளபீக் எனத் தெரியவந்தது.
திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
