ADDED : செப் 11, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த, ஓட்டல் கேஷியர் மயங்கி விழுந்து இறந்தார்.
புதுச்சேரி, சுப்பையா சாலையை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர், 58; சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் கேஷியராக பணி செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் விடுமுறைக்கு புதுச்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம், குளியல் அறைக்கு சென்ற அவர், திடீரென மயங்கி விழுந்தார்.
வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில், சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.