/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாட்டம்
/
பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாட்டம்
ADDED : ஜன 15, 2026 07:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை, வரவேற்கும் விதமாக, பழைய பொருட்களை எரித்து நேற்று போகி பண்டிகையை, மக்கள் கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், நகர பகுதி மக்கள் நேற்று அதிகாலையில், எழுந்து, வீட்டில், இருந்த பழைய பொருட்களை வீட்டு வாசலில் தீயிட்டு கொளுத்தி, போகி பண்டிகையை கொண்டாடினர்.
தொடர்ந்து, இஷ்ட தெய்வத்திற்கு மக்கள் வழிபாடு செய்தனர்.

