ADDED : மார் 11, 2024 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை உற்சவம் நடந்தது.
பாகூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை உற்சவ விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு, விநாயகர் கோவில் அருகில் உள்ள மயான திடலில் மயான கொள்ளை உற்சவம் நடந்தது. பாகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

